சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று பிற்பகல் வரை நாட்டில் தங்கியிருந்து பின்னர், மீளவும் தாயகம் நோக்கி திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்காக இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹாங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
