வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமான மழை- பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வானிலை குறித்து பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில்/ இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை சற்று உயர்வடையும்.

அதேவேளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply