இலங்கைக்கு நவீன சொகுசு மின்சார பேருந்துகளை வழங்குவதற்கு சீனா நடவடிக்கை!

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் விலை சுமார் 225,000 அமெரிக்க டொலர் என தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply