அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டம்- மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கடந்த ஜனவரி 26ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

அதற்கு அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் அன்று மாலையே அதனை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தினர்.

இந்த போராட்டமானது இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் ஒரு பெண்ணும் மற்றும் ஒருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமிருந்த இருவரும் தொடர்ந்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து இன்று காலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply