தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்று (05) பிற்பகல் இந்தக் கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
