இந்திய பயணமாகியுள்ள டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது.

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க குறித்த குழுவினர் புதுடில்லி நோக்கிப் பயணித்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது புதுடில்லிக்கு மேலதிகமாக குஜராத் மற்றும் கேரளா மாநிலத்திற்கும் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு பயணிக்கவுள்ளதுடன், அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் இந்தியாவின் விவசாய, தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உரித்தான மத்தியநிலையத்தையும் பார்வையிடவுள்ளனர்.

இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply