போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கை நுவரெலியாவில் ஆரம்பம்!

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரதான சமூகப் பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை அடையாளம் காணப்பட்டுள்ளதால் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்த விரிவான விழிப்புணர்வுப் பொறிமுறையின் ஊடாக, அம்மக்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் சிறப்பாகச் செயற்பட்ட 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இதில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply