மத்திய கிழக்கில் போர் பதற்றம்- இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான் அரசாங்கம் அவசர அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரானின் இராணுவ இலக்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படையின் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் திடீர் வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களின் போது பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் நோக்கில், இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு ஈரானிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசர அறிவிப்பானது, ஈரான் எந்த நேரத்திலும் ஒரு பாரிய அளவிலான போரை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றதா என்ற சந்தேகத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரானிய மக்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply