மின்னேரிய பகுதியில் பேருந்து விபத்து- 10 பேர் வைத்தியசாலையில்!

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும், நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply