ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பெயரிடப்பட்டார்.
ஈரானிய மக்களின் இந்தத் தெரிவை வடகொரியா ஆதரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
