கடந்த புது வருட தினத்தன்று ஏ 35 பிரதான வீதியில், சுண்டிகுளம் செல்லும் பாதையில் சிலரால் டயர்கள் எரியூட்டப்பட்டு தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்தவாறு இருந்தமை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக, எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அதன் காரணமாக எவரும் எரியூம் டயர்களை அகற்ற முன்வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.