மெக்சிகோவில் பேருந்து விபத்து; 18 பேர் பலி!

மேற்கு மெக்சிகோவில் பேருந்து ஒன்று பள்ளத்தினுள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்துச் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு, பிராந்தியத் தலைநகரான டெபிக் மற்றும் சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது 15 மீற்றர்  அளவுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 11 பெண்கள், 7 ஆண்கள் உள்ளடங்கலாக குறைந்தபட்சம் 18 பேர் உயிரிழந்தனர் எனவும், 11 சிறுவர்கள் உட்பட குறைந்தது 33 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெியாகியுள்ளன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply