முதல் காலாண்டில் IRD வருமானம் அதிகரித்துள்ளது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக முதல் காலாண்டில் சுங்கத் திணைக்களமானது எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் 89 சதவீதத்தை மட்டுமே ஈட்டியுள்ளது எனவும், கலால் திணைக்களம் 64 சதவீத வருமானத்துடன் எதிர்பார்க்கப்பட்ட இலக்கைவிடப் பின்தங்கியுள்ளது, எனவும் கூறிய அமைச்சர், சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக அது வீழ்ச்சியடைந்திருக்கலாம் – என்றார்.

அமைச்சகம் இந்த இரண்டு பகுதிகளையும் ஆராய்ந்து, எங்கு அபிவிருத்திகளைச் செய்ய முடியும் என்பதைக் கண்டறியும் என்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply