கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயம்

நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தின் 6 ஆம் இலக்க வாயில் அருகே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விரைவுச்சாலையின் சாலை அமைக்கும் தளத்தின் பாதுகாவலரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புளூமெண்டால் வீதியில் நெடுஞ்சாலைப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புப்பொருட்களைத் திருடவந்த இருவரை அப்பகுதிப் பொதுமக்கள் தடுத்தபோது முறுகல் ஏற்பட்டதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரின் துப்பாக்கியைப் பறிக்கமுற்பட்டபோது அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply