சூடானில் இருந்து மூன்றாவது தொகுதி இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்

சூடானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட இலங்கையர்களின் மூன்றாவது குழு நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்தது.

இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியோடு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் வெளியேற்றும் திட்டத்தின் கீழாக 11 இலங்கைப் பிரஜைகள் நேற்று வெளியேற்றப்பட்டதையடுத்து, சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

T 01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply