இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

தென்கொரியாவின் சியோலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 56 ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கான பொருளாதாரப் பங்காளித்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, இந்தியாவால் இலங்கைக்கு கடினமான மற்றும் சவாலான நேரத்தில் வழங்கப்பட்ட அனைத்து உதவிகளுக்கும் ஆதரவிற்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply