தேசிய கொள்முதல் குழுவிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஐவர் கொண்ட தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ.சுதர்ம கருணாரத்னவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி.பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து, ஏ.ஜி.புபுது அசங்க குணவர்தன ஆகியோரும் செயற்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply