வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை (05) வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், வெசாக் வலயங்கள், விகாரைகள் மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் இந்தப் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வருட வெசாக் பண்டிகையை பிரமாண்டமாகக் கொண்டாட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply