தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் மீண்டும் பணியில்; சுற்றறிக்கை திங்களன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீளவும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கையானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வருகின்ற திங்கட்கிழமை வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின் பின்னர் வருகின்ற திங்கட்கிழமை அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு வெளியே பணியில் அமர்த்தப்படுவார்கள் என ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply