நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்; இருப்பதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கின் கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது, ஏற்படக்கூடிய தாக்கங்களின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply