ஸ்பெயினில் அரசுக்கெதிராக விவசாயிகள் ட்ரக்டர் பேரணி

ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தாத ஸ்பெயின் அரசுக்கெதிராக நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி ட்ரக்டர் பேரணியை நடத்தியுள்ளனர்.

ஸ்பெயினில் 1961ற்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஸ்பெயினின் லிய்டா நகரில் ஒன்றுகூடி ட்ரக்டர்களில்  பேரணியாகச் சென்றனர்.

விவசாய உற்பத்திகள் அதிகளவில் பாதிக்கப்பட்டால், தங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும், மானியம் வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து குறித்த பேரணி ஸ்பெயின் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply