செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்தி செய்ய வேண்டும்! ஐ.எம்.எப் வலியுறுத்து

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமது விஜயத்தின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (16) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும்போதே கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply