ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து விபத்து; பாடசாலை மாணவர்கள் காயம்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் பின்னால் வந்த பாரவூர்தியும் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் 45 பாடசாலை மாணவர்கள் பயணித்ததாகவும், விபத்தில் 5 தொடக்கம் – 11 வயது வரையான 9 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயங்களுக்குள்ளான மாணவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி பாரவூர்தியை வேகமாகச் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply