சிறுமியை துஷ்பிரயோகம் செய்த துறவிக்கு விளக்கமறியல்!

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம்,  கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.

குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசையில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றுக்கு சிறுமியின் தாயாரை சிறுமியுடன் வருமாறு கூறி, சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருளைக் கொடுத்துவிட்டு, சிறுமியை பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தாயார் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், குறித்த சிறுமி தந்தையிடமும் பாட்டியிடம் இந்த விடயத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸாரிடம் அவர்கள் புகார் செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply