காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வளர்ப்பு நாய் பலி! இளைஞன் காயம்

கம்பளை – புபுரஸ்ஸ – அம்பதெனிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைக்க சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீடொன்றில் வளர்த்ததாக கூறப்படும் நாய் ஒன்று இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த்த் துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று (21) காலை புபுரஸ்ஸ காவல்துறை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் இந்த சுற்றிவளைப்புக்காக சென்றுள்ளனர்.

அதன்போது, வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை இளைஞர் கட்டவிழுத்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நாய் கடித்ததில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமேற்பட்டதுடன், காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கியதில் குறித்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply