மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 41 வயது ஆசிரியர்

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்ததாக பெற்றோர்கள் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 6 மாணவிகளின் பெற்றோர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சந்தேக நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply