அமெரிக்கப் பாடசாலை துப்பாக்கிச்சூட்டின் முதல் ஆண்டு நினைவு அனுட்டிப்பு

கடந்த வருடம், அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான 21 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுட்டிக்கப்பட்டது.

கடந்த வருடம், மே 24 ஆம் திகதி உவால்டேவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவன் ஒருவனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்க பாடசாலைகளில் நடைபெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பலர் இணைந்து மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply