இலங்கையின் இறையாண்மைக்காக சீனா எப்போதும் முன்னிற்கும்!

இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்போதும் முன்னிற்கும் என அந் நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன், அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட இவர், இவ்வாறு தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டதாவது, இலங்கையின், வர்த்தக, துறைமுக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில், முதலீடுகளை அதிகரிக்க, சீனா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சீனாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply