தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேச செயலாளர்!

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று
புதன்கிழமை (31) காலை அவசர தேவைக்காக ஊழியர் ஒருவர், பிரதேச செயலரின் இல்லத்துக்குச் சென்றபோது அயேஷ் பெரேரா அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply