அச்சுவேலியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில், தனியார் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பில், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு  விரைந்த தீயணைப்பு படையினர்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும், தீப்பரவலால் குறித்த வர்த்தக நிலையம் பாரிய சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையம் மீது திட்டமிட்டு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என, வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply