கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (06) கொழும்பில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலான இக்கோரிக்கையை ஏற்ற வெளிவிவகார அமைச்சர் அதற்கு சாதகமான பதிலையும் அளித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply