சீனக் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை வீரர்களுக்கு  பாராட்டு

கடலில் கவிழ்ந்த LU PENG YUAN YU 028 என்ற சீன மீன்பிடிக் கப்பலை மீட்பதற்கான பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரைக் கௌரவிக்கும் வகையில் சீனத் தூதரகம் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வானது, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜூ செனோங், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

பாராட்டு விழாவில் பேசிய சீனத் தூதுவர், கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் வலுவான உறவுக்கு சான்றாகும் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply