பிரான்ஸில் கத்திக்குத்துத் தாக்குதல்- குழந்தைகளுக்குக் காயம்

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இன்று, உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

தென்கிழக்கு பிரான்சில் உள்ள அல்பைன் நகரமான அன்னேசியில் உள்ள ஒரு பூங்கா ஒன்றில், ஒரு நபரால், இன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

தாக்குதலில், 3 குழந்தைகள் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply