இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் நகைகள் திருட்டு.!

லுணுகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

எல்டராடோ தோட்டத்தில் உள்ள ஸ்ரீ கன்னி மாரியம்மன் பத்தினி ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 தாலிகள், தாலிபொட்டுகள், கண் மலர்கள், உண்டியல், DVD player என்பன களவாடப்பட்டுள்ளன என்று லுணுகலை காவல் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, லுணுகலை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தாலி, தாலி பொட்டு மற்றும் உண்டியல் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் லுணுகலை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply