தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியரையே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர், கடந்த  மே மாதம் 11 ஆம் திகதி களுத்துறை பிரதேச, துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய சென்ற போதே கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணவரின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த போது, தனது கணவர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து,  குறித்த ஆசிரியரின் மனைவி களுத்துறை வடக்கு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனையடுத், வழக்கு மீதான விசாரணை இன்று, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட போதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு  தீர்ப்பு வழங்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply