துணிசியா படகு விபத்து -5 பேர் பலி

வட ஆபிரிக்க நாடான துணிசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு மத்தியதரை கடலில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

படகு கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியமையே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.

படகில் பயணித்த 47 பேர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்துச் சம்பவத்தில் காணாமல் போனோரைத் தேடும் பணிகள், கடலோர காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply