எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply