பிடிமானமின்றி 123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞர் கைது

உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான, தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள 123 மாடிக் கட்டிடத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞரை தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தி இறக்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் Lotte World Tower கட்டிடத்தின் மீது George King-Thompson என்னும் 24 வயது நபர், கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் ஏறியதால், 73 ஆவது தளத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கு முன்னர், ஜார்ஜ் கிங் 2019 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள 72 மாடிகளை கொண்ட Shard கட்டிடத்தில் ஏறிய போதும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply