சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி!

ஈக்குவடார் நாட்டில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டியை, சவப்பெட்டியிலிருந்து நான்கு மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டிக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், சிகிச்சையளிக்கப்பட்ட மூதாட்டி பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, பின்னர் ஈமக்கிரியைகள் செய்வதற்காக சவப்பெட்டி திறக்கப்பட்டபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, அலட்சியத்துடன் செயற்பட்டமைக்காக, வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது, மூதாட்டியின் மகன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply