வெள்ளை வேனில் வந்த மர்ம குழுவினர் – சட்டத்தரணியை வழிமறித்து தாக்குதல்

சட்டத்தரணி ஒருவர் மர்ம குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் பதவிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதவி – ஸ்ரீபுர கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான கெப்பிதிகொல்கொல்லாவை நீதிவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு மர்ம குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சட்டத்தரணி கெப்பிதிகொல்கொல்லாவை நீதிவான் நீதிமன்றிலிருந்து வெளியேறி பதவிய பிரதேசம் ஒன்றின் நகரிலுள்ள வீதி ஊடாக நேற்று (12) மாலை சென்று கொண்டிருந்தபோது அந்த வழியை வெள்ளை வேன் ஒன்றினால் மறித்த மது போதையில் காணப்பட்ட இருவர் அவரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணி மேலும் கூறுகையில், தன்னைத் தாக்கிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அலிவங்குவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply