கையெழுத்தை இடுவதற்காக கையூட்டல் பெற்ற அதிகாரி கைது!

கையூட்டல் பெற்றுக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட தொழிற்சங்கம் ஒன்றின் செயலாளர் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ள தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் மாதாந்த வேதனத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான கையெழுத்தை இடுவதற்காகவே அவர் கையூட்டலை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர் இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட சாலை பரிசோதகர் பதவியையும் வகிப்பவர் என கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply