உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நாளைமுதல் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சையின் 2022 (2023) ஆண்டுக்கான விஞ்ஞான பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 39 நிலையங்களில் 519 மதிப்பீட்டுச் சபைகள் மூலம் விடைத்தாள் மதிப்பிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

18 நகரங்களை மையமாகக் கொண்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக ஜூலை 04 ஆம் திகதி வரை குறிப்பிட்ட சில பாடசாலைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும்,  ஆங்கில மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply