ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது

ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை, வீடியோ அழைப்புகளில் தனது அந்தரங்க உறுப்புக்களை வெளிப்படுத்தியமைக்காக அமைச்சு ஒன்றில் பணிபுரியும் சாரதி ஒருவர் வெயங்கொடை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 48 வயதான சந்தேக நபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

மேற்படி நிர்வாக அதிகாரி சேவையில் இருந்தபோது,அவரது உத்தியோகபூர்வ வாகனத்தின் சாரதியாக சந்தேகநபர் பணிபுரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகமாகக் கருதப்படும் ஆபாசப் படங்களை தயாரித்து காட்சிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply