மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த நோய்ப் பரவல் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைத் தவிர கண்டி மாவட்டத்தின் கம்பளை, ஹட்டன், பேராதனை, கினிகத்தேன மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் இந்நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய்க்குட்டிகளுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட நாய்க்குட்டிகள் சுவாசக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் மற்றும் லாப்ரடோர் போன்ற கலப்பு இன நாய்களிடையே இந்த தொற்று பரவுவது கண்டறியப்பட்டது.

எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதை தவிர்க்குமாறும் 4 அல்லது 5 மாதங்களுக்கு குளிப்பாட்டுவதைத் தவிர்க்குமாறும் சாகரதிலக்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வைரஸ் தொற்று நீண்ட காலமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பரவலாக இருந்ததாகவும், தற்போது இந்த வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply