வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பதவி!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வடக்கு மாகாண ஆளுநராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

எனினும் அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே, வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் நியமித்து மாவட்ட செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply