காங்கேசன்துறைக்கான ரயில் சேவை விரைவில் ஆரம்பம்

தண்டவாள திருத்த வேலைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் திருத்தவேலைகளுக்காக மூடப்பட்டிருந்த 62 கிலோமீற்றர் நீளமுடைய தண்டவாள வீதி, இந்திய கடனுதவியில், 3300 கோடி ரூபா செலவில் திருத்தவேலைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.

ரயில் பாதை திறக்கப்பட்டதன் பின்னர் வழமைபோல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேன்துறை வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply