ஜூலை 04 ஆம் திகதி வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காம ஆலய எசல பெரஹராவை முன்னிட்டு நேற்று தொடக்கம் எதிா்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், ஆலயத்தின் எசல திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் யாரும் போதைப்பொருள்களை ஆலயத்திற்குள் கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கடமைகளை மேற்கொள்வதற்காக ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலால் அதிகாரிகள் குழுவொன்று அப் பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply