தீப்பற்றிய வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு! வவுனியாவில் சம்பவம்

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீடு தீப்பற்றி எரிவதாக அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினையடுத்து வீட்டிக்குள் நுழைந்தனர்.

இதன் போது வீட்டின் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் தடவியல் பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply