புலம்பெயர் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

கனடா வாழ் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டு மூலம் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றெடுத்துள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ வின்ட்ஸோர் பகுதியில் வசிக்கும் யசிங்க என்பவரே இவ்வாறு வெற்றிபெற்றவராவார்.

இது இலங்கை மதிப்பில் 8,17,07,73,131 பில்லியன் ரூபாயாகும்.

கனடாவிற்கு புலம்பெயர்ந்ததன் பின்னர் அவர், அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்ததோடு, ஜாக்பொட் பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிஷ்ட இலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தை, மகளின் கல்விக்காகவும், கார் வாங்குவதற்கும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், இலங்கையிலுள்ள உறவினர்களை சந்திக்கவும் பயன்படுத்தப்போவதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply