காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசங்கத்துடன் இணையவுள்ளதாக கடந்த இரு வருடங்களாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், தனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் கஞ்சன விஜயசேகரவின் குறித்த கருத்தை மறுக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை தனது முகநூலில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply